ஒரு பனித்துளி தாகம் !!
திங்கள் முகம் மறந்து,
திண்ணை எங்கும் உடல் நனைந்து !
மஞ்சள் வெயில் துறந்து,
மல்லிகை இதழ் நுழைந்து !
மார்கழி மதி முகத்தை,
பசலையாய் பால் திரிந்து !
அதிகாலைப் பாய் விரிப்பாய்,
நுனிப்புல் உடல் குழைந்து !
ஆதவன் நாளங்களும்,
அர்த்தம் அற்று குளிர் நடுங்க !
கனவோடு என் தாகங்களும்,
தயங்குது உனைக் கண்டு !
காற்றில் கை வீசி,
அள்ளி உன்னை நான் பருக !
தொண்டைக் குழி தாண்டா,
விரதம் தான் உன்னில் ஏனோ !
நின் முகம் கூட,
கானலின் சாயல் தானோ !
நிலம் நனைத்தும்,
தன்னில் அடங்கா நின் தாகம் !
அது போல் தானோ,
உறவு என்னும் சுனை நீரும் !
அடி முட்டும் மலை ஓங்கி !
அதில் கொஞ்சம் சுனை ஏந்தி !
இதழ் நனைத்து, குரல் நனைத்து !
இதயக் குவளை நிறைத்து !
தள்ளாடும் சொந்தகளாய்,
விரிசல் வழி கசிந்தனவே !
புன்னியத் தீர்த்தம் யாவும்,
தாகம் தீர்த்தச் சுவடில்லை !
உனைப் போல பனித்துளியே !
ஒரு பனித்துளி தாகம் !!
- சுந்தர் .ப
21/12/2013, 10:15pm.
திண்ணை எங்கும் உடல் நனைந்து !
மஞ்சள் வெயில் துறந்து,
மல்லிகை இதழ் நுழைந்து !
மார்கழி மதி முகத்தை,
பசலையாய் பால் திரிந்து !
அதிகாலைப் பாய் விரிப்பாய்,
நுனிப்புல் உடல் குழைந்து !
ஆதவன் நாளங்களும்,
அர்த்தம் அற்று குளிர் நடுங்க !
கனவோடு என் தாகங்களும்,
தயங்குது உனைக் கண்டு !
காற்றில் கை வீசி,
அள்ளி உன்னை நான் பருக !
தொண்டைக் குழி தாண்டா,
விரதம் தான் உன்னில் ஏனோ !
நின் முகம் கூட,
கானலின் சாயல் தானோ !
நிலம் நனைத்தும்,
தன்னில் அடங்கா நின் தாகம் !
அது போல் தானோ,
உறவு என்னும் சுனை நீரும் !
அடி முட்டும் மலை ஓங்கி !
அதில் கொஞ்சம் சுனை ஏந்தி !
இதழ் நனைத்து, குரல் நனைத்து !
இதயக் குவளை நிறைத்து !
தள்ளாடும் சொந்தகளாய்,
விரிசல் வழி கசிந்தனவே !
புன்னியத் தீர்த்தம் யாவும்,
தாகம் தீர்த்தச் சுவடில்லை !
உனைப் போல பனித்துளியே !
ஒரு பனித்துளி தாகம் !!
- சுந்தர் .ப
21/12/2013, 10:15pm.
No comments:
Post a Comment