கண்ணன் எனும் ஓர் தேவன் !!
- சுந்தர்.ப
ஆயன் ஓர் மாயனும், கார்முகில் மேய்ப்பனாம்,
காலத்தின் பாய்ச்சலாய், இருகரை கோர்க்கிறான் !
குடம் ஓன்றும், மடி ஒன்றில் பிள்ளை இவன்,
இரு நிழலாடும் கன்னித் தாய்க்கு மகன் !
முள்முடிப்
பீழிகையில் பேதம் இல்லை,
கோவர்த்தனம், முகடு அதுவும் தூரம் இல்லை !
கண்மூடி வித்தை சொல்வான் இங்கு ஒருவன்,
தனை மறித்தும், விழி அவிழ்வான் நம் இறைவன் !
வெண்ணிற மண்ணும் இதழ் வடித்து,
ரசம் என்னும் கோப்பைக்குள் தனை நிறைப்பான் !
ஆழ்நிலை தியான மௌனம் உடைத்து,
ஊழ்வினை அனுபவப் பயிர் விதைப்பான் !
மானிட மந்தையின் களி துடைத்து,
பூங்குழல் இதழ்ச் சிந்தும் பாட்டிசைப்பான் !
படைத்தவன் முதல்வனாய் கண்ணில் நிற்ப்பான்,
படைப்பின் பாவம் தன்னில் சுமப்பான் !
படைப்பில் இரு பிழை இதுவென்றால்,
பிழை தின்னும் பட்சினி நானும் தானே !
இரு பிழை திருத்தம் செய்து கொண்டேன்,
முந்தினோன் கரம் எனை ஈந்தேன் !!
- சுந்தர்.ப
No comments:
Post a Comment