திருவிழாக் காத்தாடி !!
அப்படியும் இப்படியுமா,
வருஷம் ஆறு ஓடிடுச்சி !
ஆறாத தடம் ஏதோ, அடிநெஞ்சுல
தேங்கிடிச்சி !
தூரத்துக்
கிராமத்துல, கொல சாமிக் கோயிலில !
உரிக் கம்பும்,
தோரணமும், ராட்டின காரனுமா !
திருவிழாக் கூட்டத்த,
கூத்தாடித் தாங்களிச்சோம் !
காத்தாடி தாங் கெறங்க,
விரல் கொஞ்சம் வங்கிடிச்சி !
தொட்டு வச்ச மஞ்சக்கறை,
புது சட்டையில மாறேல !
குறையாம நான் நெறச்ச,
வீதி இன்னும் தீரல !
கடை கன்னித் தோரணமும்,
களியாட்டக் கூடரமும் !
மேளதாளம் வாய்
முழங்க, செண்பகப்பூ ஊர் மணக்க !
அருள் வாக்கு
பஞ்சமில்ல, வாரித்தர சாமி உண்டு !
கடுகும் சிந்தாத
காலடி ஓடையில !
தெரியாம நான்
தொலைச்ச, எங் கைவிரல் ரேக ஒன்னு !
புதுசட்டை மஞ்சையைத்
தான், முகம் பூரா அப்பிக்கிட்டு !
முறை ஒன்னு
சொல்லிக்கிட்டு, முன் சிரிப்ப சிந்திக்கிட்டு !
காத தூரம் ஓடி
நின்னு,
சொப்பணத்துக் கூச்சலில,
கதை சொல்லிப் பாடுது !
காலடி தடங் கலைஞ்ச
வீதி என்ன தேடுது !!
- சுந்தர் .ப
1 comment:
வணக்கம்
கவியில் செப்பிய வார்த்தைகள்
வாழ்விடம் தேடிய வரிகள்
என்மனதில் நீந்தியது.
அழகிய கவிகண்டு மகிழ்ந்தேன்
தங்களின் வலைப்பகம் வருவது முதல்தடவை இனி என்வருகை தொடரும்.பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
Post a Comment