Dec 6, 2013

என் கிராமத்து வாசம் !!



என் கிராமத்து வாசம் !!
-சுந்தர் 

மேற்கு மலைத்தொடரோரம் தூறல் சிந்தும்
என் தூரத்து பூர்வீகமாய்  !

விடுமுறை நாட்களை கையில் ஏந்தி எனை
வரவேற்க காத்துநிற்கும் என் கிராமத்து அதிகாலை கார்மேகமாய் !

இரவெலாம் மழையில் காய்ந்து எஞ்சிய துளிகளில்
சிலிர்த்து நிற்கும் பச்சை விரித்த புல்வெளிகளாய் !  

செவி நாண சுரம் சேர்க்கும் விடலைப்பெண் கால் கொலுசாய் 
புத்திக்குள் சலசலக்கும் ஓடைக்கரையாய் !

பச்சை பாசி மொத்தமாய் குத்தகை ஏந்திக்கொண்ட
கோவில் குளக் கரையாய் ! 

கிள்ளை மொழி கேட்டு நெஞ்சனைக்கும்
அன்னை மொழி நேசமாய் - எனை 

தன்னுள் தொலைத்துக்கொள்ளும் என்
கிராமத்து வாசம் என்றும் அடி நெஞ்சில் 

மாறா பூவின் சுவாசமாய் !!  

No comments: