Nov 27, 2014

அன்னா கரீனீனா - டால்ஸ்டாய் !!


மழை ஓய்ந்தும் உதிர்ந்து போகா விரழிடை சகதிகள் !
போதுமிக்கிடக்கும் மன விழும்புகளாய் - ஒரு எழுத்தாளனின்,
கனத்து போன நாட்காட்டி உந்தல்கள் விரயங்களின் சிதறல்கள் தான் !!
காதல் என்னும் மதநீர்ச் சுரப்பிகள் என்றும் காலம் தாண்டி-
மீள் வினைகளாய் பிசுபிசுக்கின்றன !!
-சுந்தர்.ப  

தியானித்து மெளனம் கலைக்கும் யாசகன் !!


தியானித்து மெளனம் கலைக்கும் யாசகன் !
என் பாதங்களில் மண்டியிட்டு காத்துக் கிடக்கும் பயணங்கள் !
எனக்கான பாதைகளின் வழி காட்டும் - ஒரு தனிமை !
என்னுடன் ஒட்டிப்பிறந்து மூப்பாய் வளர்கிறது, எனை கடந்து போகாமல் !!
 -சுந்தர்.ப     

Nov 26, 2014

அழகு என்னும் ஓர் அழகு !!


மீட்டும் விரல் அழகு,
உயிர் உருகும் யாழிசை ஓர் அழகு !
குவளைக் காதழகு,
அவள் இதழ் பதித்தாள் தேநீர்ச் சுவை அழகு !
பூப்பில் பெண் அழகு,
முந்திக் கொள்ளும் தாய்மை என்னும் பேரழகு !
மொளனம் ஓர் அழகு,
அதில் விழி பேசும் மொழி அழகு !
மழலை குறும்பு அழகு,
துயில்கையில் தும்பைப் பூ அழகு !
நித்திரையில் மதி அழகு, சொப்பணம் நூறழகு !
மழைக் கால முற்றங்களும்,
மணக் கோல தோரணங்களும் என்றும் அழகு !
நோய்க்கு மருந்தழகு,
 உறவின் கதகதப்பில் நோயும் ஓர் அழகு !
தனிமை ஓர் அழகு, தோள் சாய்ந்தால் ஈரழகு !
பால் குட நீர் அழகு, பசி என்றும் பேரழகு !
முதுமை முழு அழகு,
மழலை விரல் நனைத்தாள் கூடும் ஓர் அழகு !
நட்பென்னும் தேர் அழகு,
நின்றாலும் நகர்ந்தாலும் பேரழகு !
திருவிழாக் காலங்களும்,
திரி சங்கு மடங்களும் நினைத்தாலே அழகு !
வாழ்வை அழகாக்கும் காதல் என்னும் தீ அழகு !
கண்ணீர்த் துளி அழகு, காரணங்கள் ஒத்தி வைத்தாள் !
திருமணத் தோள் என்றும், துறவுக்கு முன் அழகு !
இரவின் நிறம் அழகு, நித்திரைக்குள் நிலவு அழகு !
தூரத்து ஊர் அழகு, மழைக் குடைக்குள் குளிர் அழகு !
கோப,தபங்களும் சிறு நேரம் தான் அழகு !
கடை விழி தனைத் தாண்டா காமமும் ஓர் அழகு !
தாய் என்னும் நிறைவு அழகு, தாரம் அது மீதி அழகு !

-      - சுந்தர்.

மகள் என்னும் மழை அழகு !!


மழையும் என் மகளும் ஈரழகு!! ஊன் கலந்தால் நூறழகு !!

பால் மணம் வழிந்தோடும் தும்பைப் பூம்விரல்கள் - (மகள்)
மண் மணம் உயிர்ஜெனிக்கும் ஆதாரத் தேன் துளிகள் – (மழை)
மழலை மொழியாவும் மதி தின்னும் மாருதங்கள் - (மகள்)
அடி வானின் நற்றனமாய் முனுமுனுக்கும் மத்தளங்கள் - (மழை)
சீன்டலும் தீண்டலுமாய் ஒரு நூறுப் பொற்க்கரங்கள் - (மகள்)
அள்ளி நெஞ்சனைக்கும் ஆயிரம் மழைத் துளிகள் - (மழை)
வாழ்வில் அர்த்தப்படும் அழகிய மணித்துளிகள் - (மகள்)
சாரலின் கோர்வையில் தோல் உரிக்கும் நீர் நிலைகள் - (மழை)
பூப்பின் பூரணமாய் தாமரை மதி முகங்கள் - (மகள்)
கார்மேகம் அடைத்து ஒழுகும் அடை மழைத் தோரணங்கள் - (மழை)
நிறம் மாறும் பூவனமாய் தினம் ஒரு முகம் புனைந்து,
மகள் என்னும் பாத்திரத்தை புடம் செய்யும் பெண் இனம் - (மகள்)
திசை மாறும் பருவங்களின் திரை மூடும் மதி போல,
தினம் ஒரு புதுத் துளியாய் சுரம் சேர்க்கும் யாழினம் - (மழை)
திருமணம் எனும் ஓர் மலர் பூனும் மான் இனம்,
அவள் கோலம் அழகென்னும் அட்சையம் - (மகள்)
கடை விழி அலை ஆடும் குளக்கரையின்,
மழை விரிப்பில் ஈடாகும் அழகு ஏது - (மழை)
மகள் என்னும் மகள் ஈந்த - மழலை
முடிச்சு ஒன்று, கரம் ஏற்றி விழி நிறைக்க,
முன் ஜென்ம நியாபகமாய் மகரந்த மழை நனைந்து,
என் தாயின் கதகதப்பில் அடை காணும் முடிச்சானேன் - (மகள்)
மழை அழகு, மகள் அழகு,
ஓர் மழைக் கால பின் பொழுதில் நிழலாடும் நினைவு அழகு !!

-    -  சுந்தர்.ப

Nov 14, 2014

இமை நோகும் இரவுகள் துயில் -
தொலைக்கா கனவுகளின் பட்டியலை
என் பாய் விரிப்பில் உதிர்க்கிறது !! 
-சுந்தர்