Dec 6, 2013

பகை சாடும் புலிகள் - கவி பாடும் விந்தை !!



பகை சாடும் புலிகள் - கவி பாடும் விந்தை 
எம் தமிழ் குடியின் சொந்தமன்றோ !! 

தமிழ்ச்சீமை தனில் வாழும்
பெண்புலி கூட்டம் ஓன்று

பகை சாடல் தான் மறந்து
தமிழ்  தேடி ஓடுதடி !

புள்ளி மான் கூட்டம்  எல்லாம் 
தளிர்த்தொங்கி கூடுதடி

வீரம் சொன்ன பாரதிக்கும்- இது 
தோன்றாமல் போனதடி !

பாட்டிடைத் தலைவன் என்றும், 
பாட்டு எம் சொந்தம் என்றும்,

பாவலர் கூடம் எல்லாம் பதுங்கும் 
புலி சாட்டம் கண்டு !

பாரதிக்கும் கனவிதுவே !
சுதந்திரம் நின் கையில் பெண்ணே !! 


-சுந்தர்.ப 

No comments: