Dec 16, 2013

கனவு என் புரிதலின் மதநீர்ச் சுரப்பிகள் !!


கனவு என் புரிதலின் மதநீர்ச் சுரப்பிகள் !!

கட்டவிழ்க்கா காலச் சிதறல்களை 
கனத்துப் போகா எச்சரிக்கும் !     

என் புனை உலகின் வெந்நீர் ஊற்றுகளாய், -
இரவுகளை கதகதப்பில் மீட்க்கும் !

முட்டித் தீர்க்கும் காலக் கொடுமைகளை, 
தட்டிக் கொடுத்து தனல் ஆற்றும் !

பசித்துக் கிடக்கும் பகலவன் கரங்களை, 
பால் நிலவில் பசி ஆற்றும் !

வர்ணம் மறந்த பகல் நேரப் பக்கங்களை -
கருப்பு, வெள்ளையில் எத்தனிக்கும் !

பகல் கூட இடம் கொடுத்தால் புனை தொழில் புரியும் ! 

மூன்று காலங்களையும் முன் பரப்பி, 
ஆசைதீரத் தின்று தீர்க்கும் !

நிழலாடும் குரோதங்களை மதி -
மயங்கி, இழைப்பாறச் செய்யும் !

குரல் மங்கும் தூரங்களை, சலனம் இல்லாச் -
சாடலில், மதில் தாண்டும் !

நிலம் சாயும் மேகங்களை, திரை மறைவில் 
தாங்கிக் கொள் தோழன் அது !

விரல் தனித்துப் போகாப் பயணங்களை, என்னில்
பழக்கப்படுத்திக் கொள்ளும் !

இந்த மதகுகள்
மதம் கொஞ்சம், பலம் மிஞ்சும் -
பாதைகளை என் பாதங்களில் விதைக்கிறது !

-    சுந்தர்.ப 

No comments: