Dec 16, 2013

எனை ஆண்டாள் !!

எனை ஆண்டாள் !!
-         
சீதை தீண்ட இவன் யாழ் ஏந்தும் இராவணன் அல்ல !
என் நெஞ்சம் என்றும் ராதைக்கே – எனை
ஆண்டாளும் அவளே !

பருவம் தப்பாக் காதல் சொல்லும் –
கண்ணன் பார்வை நீள
இம் மண்ணுலக மான் விழிகள் யாவும் -
அவனுக்கு அன்றி,
மாற்றம் என்றும் இவன் நெஞ்சிற்கு அன்றே !

விரதம் மீறா விரகம் ஏந்தும் அந்த -
கடை தாண்டாக்  கயல்விழிக்கு உரியாள் !
அவள் நிழல் தேட இவன் என்றும் அறம் பிறழான் !

காதல் உண்ணும் காலத்தும் தாகம் தீரா
கண்ணன் பிறழ் மோக நிலை என்றும் –
அந்த கோதை கொள்வதில்லை !

ஆதலால் ஏனோ !
கண்ணன் அல்லா பிற கண்ணங்களின் நிழல்
அவள் கடைவிழி தீண்டித் தோற்க் கின்றன !   
-             - சுந்தர் .ப 

No comments: