Nov 26, 2014

அழகு என்னும் ஓர் அழகு !!


மீட்டும் விரல் அழகு,
உயிர் உருகும் யாழிசை ஓர் அழகு !
குவளைக் காதழகு,
அவள் இதழ் பதித்தாள் தேநீர்ச் சுவை அழகு !
பூப்பில் பெண் அழகு,
முந்திக் கொள்ளும் தாய்மை என்னும் பேரழகு !
மொளனம் ஓர் அழகு,
அதில் விழி பேசும் மொழி அழகு !
மழலை குறும்பு அழகு,
துயில்கையில் தும்பைப் பூ அழகு !
நித்திரையில் மதி அழகு, சொப்பணம் நூறழகு !
மழைக் கால முற்றங்களும்,
மணக் கோல தோரணங்களும் என்றும் அழகு !
நோய்க்கு மருந்தழகு,
 உறவின் கதகதப்பில் நோயும் ஓர் அழகு !
தனிமை ஓர் அழகு, தோள் சாய்ந்தால் ஈரழகு !
பால் குட நீர் அழகு, பசி என்றும் பேரழகு !
முதுமை முழு அழகு,
மழலை விரல் நனைத்தாள் கூடும் ஓர் அழகு !
நட்பென்னும் தேர் அழகு,
நின்றாலும் நகர்ந்தாலும் பேரழகு !
திருவிழாக் காலங்களும்,
திரி சங்கு மடங்களும் நினைத்தாலே அழகு !
வாழ்வை அழகாக்கும் காதல் என்னும் தீ அழகு !
கண்ணீர்த் துளி அழகு, காரணங்கள் ஒத்தி வைத்தாள் !
திருமணத் தோள் என்றும், துறவுக்கு முன் அழகு !
இரவின் நிறம் அழகு, நித்திரைக்குள் நிலவு அழகு !
தூரத்து ஊர் அழகு, மழைக் குடைக்குள் குளிர் அழகு !
கோப,தபங்களும் சிறு நேரம் தான் அழகு !
கடை விழி தனைத் தாண்டா காமமும் ஓர் அழகு !
தாய் என்னும் நிறைவு அழகு, தாரம் அது மீதி அழகு !

-      - சுந்தர்.

No comments: