Oct 31, 2014

அன்பு !!


             “ அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாள் ஆர்வலர்
               புன்கணீர் பூசல் தரும் “

v  மழைக் கால மனக்குழியின் ,
 மண்வாசம் கூச்சரிப்பாய் !
v  தும்பை  பூஞ்சிரிப்பின்
அதிகாலை  பாய் விரிப்பாய் !
v  மெளனத் தேன் தெளிக்கும்,
அன்பென்னும் ஓர் செண்பகப் பூ !
v  கருவறை கானங்களை விரல் நுனி
விருந்தாக்கும் அன்னை மனம் !
v  மழலை முகம் யாவும் மகள் என்னும்,
சுருதி சேர்க்கும் தந்தை குணம் !
v  எட்டாப் பொருளாய் பசிப்பிணி
தீர்க்கும் தெய்வப் பதம் !
v  பயிர் வாட , மனம் வாடும் மார்க்கங்களின்
 பிள்ளை முகம் !
v  ஏழ்மை தோள் தாங்கும் தோழன்
என்னும் தேரின் திடம் !
v  கரம் நோக கொடை ஈனும்
அறம் சேர் மன்னர் இனம் !
v  இரத்த சொந்தங்களின் எல்லை தாண்டி அன்பில்
பதைப் பதைக்கும் ஏழை குணம் !   
v  சாதி மாத ஆழிகளின் இடை தாண்டி
அடி வானில் அர்த்தப்படும் அன்பின் நிறம் !
v  அன்பு என்னும் மூர்க்கத்தை அடிநாத வலை விரிப்பாய்
உயிர் காக்கும் பூமித்தாயின் பால் மணம் !


-சுந்தர்.

No comments: