Oct 8, 2014

முக்தி !!


கண்டீபம் கடை நோக,
கார் முகில் விழி நோக !
தமிழ் யானை தந்தம் கொண்டு,
ஏர் ஓடும் உழவன் உண்டு !
வள்ளுவம் வான் நிறைக்க,
வைகறை தேன் தெளிக்கும் !
வாழ்வின் முடிச்சு அவிழ்க்கும்,
பாரத போர் முழக்கம் !
மந்திரம் தந்தைக்கு என்று,
வழக்குறை பிள்ளை உண்டு !
ஏகலை சாத்தியமும் ஆயிரம்,
மண்ணில் உண்டு !
அறம் இன்றி அமையா
உலகென்று என்றும் உண்டு !
முடி துறந்து இடை மெலிந்து,
யாத்திரம் என்பதெல்லாம் !
குருவின் அடிதேடி
முக்தியின் மீட்டலுக்கே !
குரு வென்பது யாதெனில்,
அகம் தேடும் பாதை ஒன்றே !!
- ப.சுந்தர்

No comments: