துயில் தின்னும் கவிதைத் தும்பிகளின் சிறகு ஒடித்தே என் நடுநிசிகள் தீர்ந்து போகின்றன !! -சுந்தர்.ப
Nov 27, 2014
Nov 26, 2014
அழகு என்னும் ஓர் அழகு !!
மீட்டும்
விரல் அழகு,
உயிர் உருகும் யாழிசை ஓர்
அழகு !
குவளைக்
காதழகு,
அவள் இதழ் பதித்தாள் தேநீர்ச்
சுவை அழகு !
பூப்பில்
பெண் அழகு,
முந்திக்
கொள்ளும் தாய்மை என்னும் பேரழகு !
மொளனம்
ஓர் அழகு,
அதில் விழி பேசும் மொழி
அழகு !
மழலை குறும்பு அழகு,
துயில்கையில்
தும்பைப் பூ அழகு !
நித்திரையில்
மதி அழகு, சொப்பணம் நூறழகு
!
மழைக் கால முற்றங்களும்,
மணக் கோல தோரணங்களும் என்றும்
அழகு !
நோய்க்கு
மருந்தழகு,
உறவின் கதகதப்பில் நோயும்
ஓர் அழகு !
தனிமை ஓர் அழகு, தோள்
சாய்ந்தால் ஈரழகு !
பால் குட நீர் அழகு,
பசி என்றும் பேரழகு !
முதுமை
முழு அழகு,
மழலை விரல் நனைத்தாள் கூடும்
ஓர் அழகு !
நட்பென்னும்
தேர் அழகு,
நின்றாலும்
நகர்ந்தாலும் பேரழகு !
திருவிழாக்
காலங்களும்,
திரி சங்கு மடங்களும் நினைத்தாலே
அழகு !
வாழ்வை
அழகாக்கும் காதல் என்னும் தீ
அழகு !
கண்ணீர்த்
துளி அழகு, காரணங்கள் ஒத்தி
வைத்தாள் !
திருமணத்
தோள் என்றும், துறவுக்கு முன் அழகு !
இரவின்
நிறம் அழகு, நித்திரைக்குள் நிலவு
அழகு !
தூரத்து
ஊர் அழகு, மழைக் குடைக்குள்
குளிர் அழகு !
கோப,தபங்களும் சிறு நேரம் தான்
அழகு !
கடை விழி தனைத்
தாண்டா காமமும் ஓர் அழகு
!
தாய் என்னும் நிறைவு அழகு, தாரம்
அது மீதி அழகு !
- - சுந்தர்.ப
மகள் என்னும் மழை அழகு !!
மழையும் என் மகளும் ஈரழகு!! ஊன்
கலந்தால் நூறழகு !!
பால் மணம் வழிந்தோடும் தும்பைப்
பூம்விரல்கள் - (மகள்)
மண் மணம் உயிர்ஜெனிக்கும்
ஆதாரத் தேன் துளிகள் – (மழை)
மழலை மொழியாவும்
மதி தின்னும் மாருதங்கள் - (மகள்)
அடி வானின் நற்றனமாய்
முனுமுனுக்கும் மத்தளங்கள் - (மழை)
சீன்டலும் தீண்டலுமாய் ஒரு நூறுப் பொற்க்கரங்கள் - (மகள்)
அள்ளி நெஞ்சனைக்கும்
ஆயிரம் மழைத் துளிகள் - (மழை)
வாழ்வில் அர்த்தப்படும்
அழகிய மணித்துளிகள் - (மகள்)
சாரலின் கோர்வையில்
தோல் உரிக்கும் நீர் நிலைகள் - (மழை)
பூப்பின் பூரணமாய்
தாமரை மதி முகங்கள் - (மகள்)
கார்மேகம் அடைத்து
ஒழுகும் அடை மழைத் தோரணங்கள் - (மழை)
நிறம் மாறும் பூவனமாய்
தினம் ஒரு முகம் புனைந்து,
மகள் என்னும் பாத்திரத்தை
புடம் செய்யும் பெண் இனம் - (மகள்)
திசை மாறும் பருவங்களின்
திரை மூடும் மதி போல,
தினம் ஒரு புதுத்
துளியாய் சுரம் சேர்க்கும் யாழினம் - (மழை)
திருமணம் எனும்
ஓர் மலர் பூனும் மான் இனம்,
அவள் கோலம் அழகென்னும்
அட்சையம் - (மகள்)
கடை விழி அலை ஆடும்
குளக்கரையின்,
மழை விரிப்பில்
ஈடாகும் அழகு ஏது - (மழை)
மகள் என்னும் மகள்
ஈந்த - மழலை
முடிச்சு ஒன்று,
கரம் ஏற்றி விழி நிறைக்க,
முன் ஜென்ம நியாபகமாய்
மகரந்த மழை நனைந்து,
என் தாயின் கதகதப்பில்
அடை காணும் முடிச்சானேன் - (மகள்)
மழை அழகு, மகள்
அழகு,
ஓர் மழைக் கால
பின் பொழுதில் நிழலாடும் நினைவு அழகு !!
- - சுந்தர்.ப
Oct 31, 2014
அன்பு !!
“ அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாள் ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும் “
v மழைக் கால மனக்குழியின் ,
மண்வாசம் கூச்சரிப்பாய் !
v தும்பை பூஞ்சிரிப்பின்
அதிகாலை பாய் விரிப்பாய் !
v மெளனத் தேன் தெளிக்கும்,
அன்பென்னும் ஓர் செண்பகப் பூ !
v கருவறை கானங்களை விரல் நுனி
விருந்தாக்கும் அன்னை மனம் !
v மழலை முகம் யாவும் மகள் என்னும்,
சுருதி சேர்க்கும் தந்தை குணம் !
v எட்டாப் பொருளாய் பசிப்பிணி
தீர்க்கும் தெய்வப் பதம் !
v பயிர் வாட , மனம் வாடும் மார்க்கங்களின்
பிள்ளை முகம் !
v ஏழ்மை தோள் தாங்கும் தோழன்
என்னும் தேரின் திடம் !
v கரம் நோக கொடை ஈனும்
அறம் சேர் மன்னர் இனம் !
v இரத்த சொந்தங்களின் எல்லை தாண்டி அன்பில்
பதைப் பதைக்கும் ஏழை குணம் !
v சாதி மாத ஆழிகளின் இடை தாண்டி
அடி வானில் அர்த்தப்படும் அன்பின் நிறம்
!
v அன்பு என்னும் மூர்க்கத்தை அடிநாத வலை விரிப்பாய்
உயிர் காக்கும் பூமித்தாயின் பால் மணம் !
-சுந்தர்.ப
Oct 8, 2014
முக்தி !!
கண்டீபம் கடை நோக,
கார் முகில் விழி நோக !
கார் முகில் விழி நோக !
தமிழ் யானை தந்தம் கொண்டு,
ஏர் ஓடும் உழவன் உண்டு !
ஏர் ஓடும் உழவன் உண்டு !
வள்ளுவம் வான் நிறைக்க,
வைகறை தேன் தெளிக்கும் !
வைகறை தேன் தெளிக்கும் !
வாழ்வின் முடிச்சு அவிழ்க்கும்,
பாரத போர் முழக்கம் !
பாரத போர் முழக்கம் !
மந்திரம் தந்தைக்கு என்று,
வழக்குறை பிள்ளை உண்டு !
வழக்குறை பிள்ளை உண்டு !
ஏகலை சாத்தியமும் ஆயிரம்,
மண்ணில் உண்டு !
மண்ணில் உண்டு !
அறம் இன்றி அமையா
உலகென்று என்றும் உண்டு !
உலகென்று என்றும் உண்டு !
முடி துறந்து இடை மெலிந்து,
யாத்திரம் என்பதெல்லாம் !
யாத்திரம் என்பதெல்லாம் !
குருவின் அடிதேடி
முக்தியின் மீட்டலுக்கே !
முக்தியின் மீட்டலுக்கே !
குரு வென்பது யாதெனில்,
அகம் தேடும் பாதை ஒன்றே !!
அகம் தேடும் பாதை ஒன்றே !!
- ப.சுந்தர்
Sep 10, 2014
என் பெயர் இல்லாக் காதல் அம்மா !!
கார்கோட மேகம் ஓன்று சீறிச்
சிந்தும் திவளைகளில்
சிலிர்த்தது இந்த காதல்
விந்து !
இருள் தின்னும் அந்தி
நுழைவுக்குள் நெஞ்சுறைய
கொட்டித் தீர்த்த மழைக்காலம் ஓன்று !
ஒரு திங்கள் கூத்தாடிகளின்
படையெடுப்பாய்,
எனை மொய்த்த காதல் ஈசல் !
நெஞ்சனைக்க காத்து நின்ற
காலம் யாவும்,
மூச்சிறைக்க முட்டிக்கொண்ட
நேரம் அது !
மலர் உண்ணும் காதல் வண்டு
ஓன்று செவி நுழைய
துடித்தனன் காளை உள்ளம் !
துயிழாது, துவளாது,
தூரத்துப் பாவை -
விழி உண்ணும் விரதம் கொண்டு
!
வண்டு உடைத்த மாங்கனியாய்
காதல் கனிய,
அவள் அந்தரங்க மனக்குகையில்
மாட்டிக்கொண்ட
பேதை வண்டினம் நான் !
தேன் உண்ணும் தொழில்
மறந்து, மலர் உண்ணும்
வண்டானால், ஊடல் இன்றி
போவதுண்டோ !
அவள் ஊடல் என்னும் மொட்டு
உதிர்க்க,
மோகம் தான் கூடுது இங்கே !
அவள் வண்டு உண்ணும் மலர்
ஆனால்,
எனை உண்ணும் இதழ் தேன் சுவை
தானே !
ஊடல் கொஞ்சம், கூடல்
கொஞ்சம்
மாறி மாறித் தேடிக்கொண்டேன்
!
பேடை அவள் காதலுக்கு
கார்முகில்
தூது சொன்னேன் !
காலம் தாண்டி கூடி
நின்றும்,
காதல் என் கையில் அன்றோ !
அறியக் காலம் கொண்டு
அலைந்து,
தேடிக் காதல் இன்று !
எனைக் கொஞ்சம் அவள்
சேர்த்து,
எனில் கொஞ்சம் அவள்
சேர்ந்து !
கூடாத மஞ்சம் கூட,
அவள் வாசம் சூடிக் கொள்ள !
சேரா திசை எட்டும்,
காதல் சிந்தி காதல் ஆகும் !
மதியை ஒரு மகள்,
கார்குழல் சூடி நின்றாள் !
தேக விருந்துண்ணும் சூத்திரம்
தேடிச் சொன்னால் !
முத்து ஒழுகும் மஞ்சத்
திறவுகள்,
தனில் ஏந்தும் மாதுளையே !
அவள் மாடக் கூடலிலே,
மோகம் தின்னுத் தெளிந்தேன் !
காணும் திசை எங்கும் நான்
விதைத்தேன்,
காதல் இதழ் செழிக்க அவள்
தேன் தெளித்தாள் !
காதல் எனும் கொட்டகைக்குள்,
என் காதல்
அடைப்பதற்க்கில்லை !
மோகக் தியான காமம் என்னும்,
அஞ்சரைக்கும் சொந்தம் இல்லை
!
உயிர் ஜெனிக்கா குழந்தை
போல,
என் பெயர் இல்லாக் காதல்
அம்மா !!
சுந்தர்.ப
Aug 28, 2014
நாவல்...!
பெட்டகத்தில் அடைகாக்கும் புத்தகத்தின் வாசம்,
என்னை தொட்டு திண்ணக் கேட்கிறது..!
உத்திர தோள்தாங்கும் -
தேக்குமர பாளிகளாய்,
அடிநெஞ்சில் வாசம் செய்யும்,
தென்பாண்டி தேசம் அவள்..!
இளவேனில் காலைகளின் திங்கள் முகம் -
நாணும் மௌனம் அவள் முன்னுரை..!
நெறிகெட்டி உடைத்து ஒழுகும்
கனத்த மேகம் அவள் மனக்குகை..!
தூரத்து முகம் காட்டி,
தொடுதூரம் விரல் நீட்டி,
பால் உண்டு, மஞ்சம் கூடி,
விந்துண்ணும் பிண்டமாய்,
கரு சுமந்தாள் என்னையே..!
முக்காலம் உருண்டோடும்,
முழுமதியும் கரைந்தோடும்..!
வானம் பார்த்த பூமி உண்டு,
ஈரம் இல்லா சாமியுண்டு...!
காவு ஈந்து பொங்கவச்சி
வேண்டி நிற்கும் சாதியுண்டு...!
இடைநிறைத்த காலம் தாண்டி,
விரல் கோர்த்த தந்தையுண்டு..!
தீராத உறவுகளும், நிழல் தூங்கும் திண்ணைகளும்,
ஏராளம் ஊரில் உண்டு..!
வடு உண்டு, வலி உண்டு..
வற்றா கானல் ஓடும் கரிசல் ஓடை உண்டு...!
திருவிழா கூடங்களும்,
திரிசங்கு மாடங்களும் !
மணிதுளிக்கு ஒன்றாய் நிறம் மாறும்
காலங்களும் கதை செல்லும்...!
தாசியும், தாரமும் -
தாய் உண்ணும் சேயுமாய் !
மங்கையின் ஆழம் உண்டு,
முந்தானை நீளம் உண்டு..!
பாடம் தொலைத்து, பாதைமாறி
கலிதீண்ட காமம் சாடி..
வீரம், ஈணம், துரோகம் கூடி,
விரயமாகும் மனித ஓடம்..!
சலனமில்லா காணல் மேலே
பயணமாகும் காதை இங்கே..!
அன்றாட மாந்தரும் நெஞ்சோடு கூடுவார்,
ரீங்கார கோர்வையாய் நெடுநாவல் ஓடிடும்..!
கதைகள் யாவும் கதைகளல்ல
கரு உடைக்கும் மழலைதானே..!
விதைகளாய் மனம் விதைத்தால்,
நரம்பிலும் ஊறிச்சாகும் !
கதைகளும் உதிரம் ஆகும்..!
சுந்தர்.ப
Aug 27, 2014
கடைவிழி காட்டி நின்றாள்..!
நான் மாடக்கூடலுக்குள்,
கதை செல்லும் ஊடலுக்குள் !
முற்றம் மணம் நிறைக்கும் -
கதம்பக்கூடைகளும்..! தை மிஞ்சிப் போனபின்னும்,
வழிந்தோடா மார்கழியாய்..!
முழங்கால் முறை செய்ய,
மஞ்சள் திரை ஓடி !
ஊமத்தம் பூ உதிரும் -
வைகை நீராடி..! குழல் சிந்தும் தேனோடு -
வாரிப்பூ சூடி,
மாமன் தேரோடும் வழி -
நீளக்காத்து நின்றாள்..! உச்சி முகர்ந்துண்ணும் -
செஞ்சாந்து கோலங்களும்,
நெற்றி வழிந்தொழுகும் -
வியர்வை நாளங்களும்..,
ஒற்றைப் பனைமரத்தின் இடை -
உரசும் மாங்கொம்பாய்..
பூத்து காய்காய்த்து,
வண்டுண்ணும் மாங்கனியாய்...! கூரைப் பட்டுடுத்தி,
ஒய்யார மையிட்டு !
காதல் அதில் கசிய,
கடைவிழி காட்டி நின்றாள்..!
மாமன் கண் முன்னே -
தாவணி போட்ட நெஞ்சு,
காமன் கணைமீட்டும் -
செங்கரும்பு ஆனதிங்கு...!
முற்றத்து மழை சிப்பும்,
தாழ்வாரப் பூவிரிப்புமாய் !
நின் திமிர் மிஞ்சும் வெட்கம்,
என் துயில் தின்னப்பார்க்குதடி...!!
சுந்தர்.ப
Subscribe to:
Posts (Atom)